தமிழ்நாடு
சென்னை பக்கம் திரும்பியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை பக்கம் திரும்பி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும் அதன் பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ஆக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி திசை திரும்பி உள்ளதாகவும் இதன் காரணமாக மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என்பதால் சென்னைக்கு மிக பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கனமழை காரணமாகவும் ஏரிகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் காரணமாகவும் சென்னை வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் தற்போது சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று கூறியிருப்பது சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.