இந்தியா

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் அறிவிப்பு

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இன்னும் 48 மணி நேரத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என்றும் இதனை அடுத்து மேற்கு வங்க கடலில் கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version