தமிழ்நாடு
24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தைச் சுற்றி 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் 11ஆம் தேதி வட தமிழகத்தை காற்றழுத்த தாழ்வு நெருங்கும் என்றும் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் அதிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.