Connect with us

தமிழ்நாடு

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமீன் மறுப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

Published

on

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். இந்நிலையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.

#image_title

பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடந்த போதிலும் தேஜஸ்வி யாதவ் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டுள்ளார் என அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் பிரசாந்த் உம்ராவ். மேலும் தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 வடமாநில தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாகவும் ஒரு விஷமத்தனமான தகவலை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரசாந்த் உம்ராவ்வை கைது செய்ய திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்தது. இந்நிலையில் பிரசாந்த் உம்ராவ் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் வழக்கு தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை 10 நாட்களில் அனுகி நிவாரணம் கேட்க அறிவுறுத்தியது டெல்லி நீதிமன்றம்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார் பிரசாந்த் உம்ராவ். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், மனுதாரரின் போலி வீடியோ பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்து இந்தியா முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி, இந்த வீடியோக்களை பார்க்கும் போது தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நிதிபதி. இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!