தமிழ்நாடு

டிமானிடைசேஷனை அமல்படுத்திய முறை தவறு.. ரஜினிகாந்த் அந்தர் பல்டி

Published

on

சென்னை: பணமதிப்பிழப்பு நீக்கத்தை அமல்படுத்திய முறை தவறு என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். பணமதிப்பிழப்பு நீக்கம், ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் தமிழர்களின் விடுதலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் கேள்வி கேட்கப்பட்டது.

அதில்,  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இன்னொருமுறை அதுபற்றி கருத்து கூறுகிறேன்.

பணமதிப்பிழப்பு நீக்கத்தை சரியாக செயல்படுத்தவில்லை. அதை அமல்படுத்திய விதம் தவறு. அதைப்பற்றி விரிவாக பேச வேண்டியுள்ளது.

பலர் பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைக்கிறார்கள். நிறைய பேர் அப்படி நினைக்கிறார்கள். பலர் அப்படி நினைத்தால், கண்டிப்பாக பாஜக அப்படிப்பட்ட கட்சியகத்தான் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version