கிரிக்கெட்

டாஸ் வென்ற டெல்லி அணி: பேட்டிங் செய்யும் தல தோனி படை!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளது என்பது தெரிந்ததே, மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்றார். இதனையடுத்து அவர் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் போட்டி டெல்லி அணிக்கு நூறாவது போட்டி என்பதால் இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக அந்த அணி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சென்னை அணியும் முதலில் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதால் இந்த போட்டியை வெல்ல தீவிரமாக முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்:

சென்னை அணி: ருத்ராஜ் கெய்க்வாட், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, மொயின் அலி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்,

டெல்லி அணி: ஷிவர் தவான், பிரித்வி ஷா, ரஹானே, ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், டாம் கர்ரன், அமித் மிஸ்ரா, அவ்னேஷ் கான்.

Trending

Exit mobile version