இந்தியா

டெல்லியில் முழு ஊரடங்கு: அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

டெல்லியில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் அதேபோல் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிரா, டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் அது மட்டுமின்றி பேருந்துகள் மெட்ரோ ரயில்கள் திரையரங்குகள் ஆகியவற்றில் 50 சதவிகித மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே டெல்லி முதல்வர் ரவிந்த் கேஜரிவால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார் என்பது தெரிந்ததே.

seithichurul

Trending

Exit mobile version