இந்தியா
காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு!
காலை வரையறையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. ஏற்கனவே அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் அனைத்து பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி மூடப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதித்த அரசு குழந்தைகளை மட்டும் பள்ளிக்கு செல்ல கட்டாயப்படுத்துவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக காலவரையின்றி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது அம்மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.