இந்தியா
தீபாவளியன்று டெல்லியில் ஏற்பட்ட 206 தீ விபத்துகள்!
தீபாவளியன்று பல்வேறு இடங்களில் தீப்பிடிக்கும். எனவே தீயணைப்புத் துறை வீரர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
2020-ம் ஆண்டு தீபாவளியின் போது டெல்லியில் மட்டும் 206 இடங்களில், தீ விபத்து என்று அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கர்க் ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்,
மொத்தம் பதிவான 206 தீ விபத்துகளில், 129 அழைப்புகள் பீக் ஹவர்ஸ் எனப்படும் பரபரப்பாக நகரம் இயக்கும் நேரங்களில் வந்துள்ளது.
சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு அழைப்புகள் குறைவுதான். மிகப் பெரிய தீவிபத்து என்றால் முகுந்தாவில் ஏற்பட்டது, அந்த வீபத்தில் உயிர் இழந்தார். தீயணைப்பு வீரர்கள் சென்ற பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை இருந்தும், மக்கல் பட்டாசு வெடித்தனர். எனவே வழக்கத்தை விட அதிகமாக டெல்லியில் காற்றும் மாசு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.