Connect with us

இந்தியா

ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர்.. நூதன மோசடியால் ரூ.9 லட்சம் இழந்த பரிதாபம்..!

Published

on

ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் துரதிஷ்டவசமாக ரூபாய் 9 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும் அவர் அந்த வேலைக்காக ஒரு லிங்க்கை கிளிக் செய்ததாகவும், அதனால் அவர் 9 லட்சம் பணத்தை இழந்ததாகவும் டெல்லி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வசிக்கும் ஹரீம் பன்சால் என்பவர் சமூக ஊடகங்களில் ஆன்லைன் மூலம் வேலை தேடி உள்ளார். அப்போது அவர் குறைந்த நேரத்தில் வேலை செய்தால் பெரும் பணம் சம்பாதிப்பது குறித்த விளம்பரத்தை பார்த்து உள்ளார். இதனை அடுத்து அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்ட போது அவருக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. அந்த லிங்கை அவர் க்ளிக் செய்த நிலையில் அவர் ஒரு இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து வேலை செய்யும் ஒரு இணையதளம் என்றும் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை முடித்தால் அவருக்கு கமிஷன் கொடுக்கப்படும் என்றும் அதற்காக அவர் டெபாசிட் பணம் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் டெபாசிட் பணம் செலுத்திய நிலையில் அவர் செய்த வேலைக்கு ஒரு சிறிய தொகை கமிஷனாக கொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து அதிக பணம் டெபாசிட் செய்தால் அதிக வருமானம் தரும் வேலை கிடைக்கும் என்று மோசடி செய்பவர்கள் கூறியதை நம்பியவர் 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தார். ஆனால் அவர் செய்த பணிக்கான பணம் வரவில்லை என்பதை அடுத்து அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதனை அடுத்து அவர் டெல்லி காவல்துறையினரிடம் புகார் செய்துள்ள நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இது போன்று ஆன்லைன் வேலை தருவதாக கூறி பண மோசடி செய்வது இது முதல் முறை அல்ல என்றும் இது குறித்த விழிப்புணர்வு காவல்துறையினரால் ஏற்படுத்தி வந்தபோதிலும் பலர் தொடர்ந்து பணத்தை இழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்றும் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் வேலையை பொருத்தவரை எந்தவித டெபாசிட் தொகையும் கேட்கப்படாது என்றும் அவ்வாறு பணம் கேட்கப்பட்டாலே அது மோசடியான நிறுவனம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!