இந்தியா
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் திடீர் மரணம்: அதிர்ச்சியில் காங்கிரஸ்!
டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்சித் திடீரென இன்று மரணமடைந்துள்ளார். இவரது மறைவுச்செய்தி அரசியல் கட்சியினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
81 வயதான ஷீலா தீக்சித் தற்போது டெல்லியின் காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் மூன்று முறை 15 ஆண்டுகள் டெல்லியின் முதல்வராக இருந்தவர். கேரளாவின் ஆளுநராகவும் ஷீலா தீக்சித் இருந்துள்ளார். இவர் இன்று காலைதான் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் எயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து திடீரென மரணமடைந்த ஷீலா தீக்சித்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தனது அன்பான மகளை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது என ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.