இந்தியா
டெல்லிக்கு வடக்கே வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்கத்தடை!
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்நிலையில் டெல்லிக்கு வடக்கே உள்ள வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ, எப்படி பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கும் இந்தியா தயார் என கூறினார்.
இந்த சூழ்நிலையில் டெல்லிக்கு வடக்கே உள்ள வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விமானப்படை வசதிக்காக டெல்லிக்கு வடக்கே பயணிகள் விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்ரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.