இந்தியா
மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்
![Aravind Kajriwal - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/05/Aravind-Kajriwal.jpg)
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து இரண்டு கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு, இன்று முதல் சில தளர்வுகளுடன் மூன்றாம் கட்டமாகத் தொடர்கிறது.
இந்நிலையில் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “மார்ச் 24-ம் தேதி முதல், பிரதமர் மோடி அறிவித்தன பேரில் நடைபெற்று வந்த ஊரடங்கு முக்கியமான ஒன்று. கொரோனாவில் இருந்து நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது, சமுக இடைவெளி போன்றவற்றை நாம் அறியாமல் இருந்த போது மத்திய அரசு துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.
இனிமேல் படிப்படியாக நாம் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். டெல்லி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசி அறிவுறுத்தலின் படி படிப்படியாக விலக்குகள் அளிக்கப்பட்டு வருகிறது. திருமணங்களில் 5 பேர் வரை கூடலாம். விலகி இருந்து படி மது பானங்கள் வாங்கி செல்லவும் டெல்லி அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.