கிரிக்கெட்
முதலிடம் யாருக்கு? டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரில் 50வது போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன. இன்றைய போட்டியில் வெல்லும் அணியே, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சுவராஸ்யமாக இருக்கும் என்று கருதப்படுகிறது
இந்த நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளுமே 12 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன என்பதும் இரு அணிகளும் 18 புள்ளிகள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெற்றி பெறும் அணி 20 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:
சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், ஹசில்வுட்,
டெல்லி அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரிபல் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹெட்மயர், அக்சர் பட்டேல், அஸ்வின், ரபடா, நார்ட்ஜி மற்றும் அவேஷ்கான்