கிரிக்கெட்

கடைசி ஓவர் வரை போராடிய மும்பை: டெல்லி அணி த்ரில் வெற்றி!

Published

on

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தாலும் 138 என்ற இலக்கை அடைய விளையாடிய டெல்லி அணியை தோற்கடிக்க கடைசி ஓவர் வரை போராடியது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. ரோகித்சர்மா 44 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும், இஷான் கிஷான் 26 ரன்கள் எடுத்தனர்.

இதனை அடுத்து 138 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஷிகர் தவானின் அருமையான ஆட்டத்தால் இலக்கை நெருங்கினாலும், அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள் மற்றும் டிரென்ட் போல்ட், பும்ராவின் அபார பந்துவீச்சால் ரன்கள் எடுக்க திணறினர்.

இதனையடுத்து கடைசி ஓவரில் 138 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார்/ டெல்லி அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பதும், முதலிடத்தில் பெங்களூர் அணியும் மூன்றாவது இடத்தில் சென்னை அணியும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version