கிரிக்கெட்

ஷிகர் தவான் அபார ஆட்டம்: சென்னை அணி தோல்வி!

Published

on

டெல்லி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் அபார பேட்டிங் காரணமாக சென்னை அணி தோல்வியை தழுவியது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தன. சுரேஷ் ரெய்னா 54 ரன்களும், மொயின் அலி 36 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷிகர் தவான் மிக அபாரமாக விளையாடி 85 ரன்கள் எடுத்தார் என்பதும், பிரித்வி ஷா 72 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version