இந்தியா
போனில் கேம் விளையாடிய மகன்.. அடித்துக் கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!
டெல்லியில் பால் வியாபாரம் செய்து வந்தவர் ஆதித்யா பாண்டே (27 வயது). இவரது மகன் உத்கர்ஷ் என்ற கியான் பாண்டே (5 வயது) படிக்காமல் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
அதை பார்த்து எரிச்சல் அடைந்த அவரது தந்தை கட்டையால் தனது மகனைத் தாக்கியுள்ளார். உடனே கியான் பாண்டே மயக்கம் அடைந்த நிலையில் இரவு 10 மணியளவில் அவரது தாய் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குத் தனது மகனைத் துக்கிச் சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மகன் இறந்ததை உறுதி செய்தனர். மேலும் கை, கால், கழுத்து பகுதிகளில் காயம் இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் பெற்றோர்களை விசாரிக்கும் போது முதலில் விசாரணைக்கு ஒத்துலைவில்லை. பின்னர் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தனது மகன் படிக்காமல் மொபைல் போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்ததால் அவரை கட்டை எடுத்துத் தாக்கியதாகத் தந்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து காவல் துறையினர் ஆதித்யா பாண்டேவை கைது செய்து, கியான் பாண்டே உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சௌபேபூர் பகுதியில் வேறு சாதி பெண்ணை காதலித்து மகன் கர்ப்பம் ஆக்கியதை அறிந்த தாய் அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். இப்போது தாய் மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.