சினிமா செய்திகள்
50 கோடி ரூபாய் வீட்டில் குடிபோகும் தீபிகா – ரன்வீர் ஜோடி!
தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங்கின் திருமணம் கடந்த நவம்பர் 15ம் தேதி இத்தாலியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.
திருமண புகைப்படத்தை தீபிகா படுகோனே தனது சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்நிலையில், மும்பையில் 50 கோடி ரூபாய்க்கு புதிய வீடு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும், அதன் உட்புற அலங்கரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. நாளை (நவம்பர் 18) இத்தாலியில் இருந்து ரன்வீர் – தீபிகா தம்பதியினர் இந்தியா வருகின்றனர். தற்போதைக்கு ரன்வீர் சிங்கின் இல்லத்தில் இருவரும் சிறிது காலம் இருக்கப்போவதாகவும், பிரத்யேகமாக அலங்கரிக்கப்படும் வீட்டின் பணிகள் விரைவாக முடிவடைந்தவுடன் இருவரும் புது இல்லத்திற்கு குடிபுக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.