சினிமா செய்திகள்

பெற்றோரை அடுத்து தீபிகா படுகோனேவுக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி!

Published

on

நேற்று தீபிகா படுகோனின் பெற்றோர் மற்றும் சகோதரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று தீபிகா படுகோன் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீபிகா படுகோனின் தந்தையும் முன்னாள் பேட்மிட்டன் வீரருமான பிரகாஷ் படுகோனே மற்றும் அவரது மனைவி உஜாலா மற்றும் தீபிகாவின் சகோதரி அனிஷா ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அவர்கள் பெங்களூரில் தங்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் பிரகாஷ் படுகோனே மட்டும் காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது கணவருடன் தீபிகா படுகோனே மும்பையில் இருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் எந்தவித சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோனே மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாகவும் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு விடுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version