உலகம்

தீபாவளிக்கு பகலிலும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.. தமிழக அரசு மேல்முறையீடு!

Published

on

டெல்லி: தீபாவளி அன்று 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த  கட்டுப்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் சுற்றுசுழல் மாசு அடைகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பட்டாசை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் இதில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்தது. தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது பராம்பரியத்திற்கு எதிரானது என்று மனுதாக்கல் செய்துள்ளது.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version