கிரிக்கெட்

2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் தீபக் சஹார்: சிஎஸ்கே அணி அதிர்ச்சி!

Published

on

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹர் விலகிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தற்காலிகமாக விலகினார். இந்த நிலையில் தற்போது அவரது முதுகுப் பகுதியிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முழுவதுமாக பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களாக இருந்த டூபிளஸ்சிஸ், சாம் கர்ரன், வாட்ஸ்சன் உள்ளிட்டோர் இல்லாத நிலையில் தற்போது தீபக் சஹாரும் இல்லை என்பது சிஎஸ்கே அணிக்கு பெரும் அதிர்ச்சியிஅ ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த தொடரின் நான்கு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளதை அடுத்து இனியாவது நம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version