கிரிக்கெட்

போட்டி முடிந்ததும் காதலியிடம் புரபோஸ் செய்த தீபக் சஹார்: வைரல் வீடியோ!

Published

on

இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் முக்கிய வீரரான தீபக் சஹர் தனது காதலியிடம் புரோபோஸ் செய்த காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் தீபக் சஹர் என்பதும் அவர் பல விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சென்னை அணியின் முக்கிய பந்து வீச்சாளரான தீபக் சஹர் போட்டி முடிந்ததும் மைதானத்திற்கு சென்று பார்வையாளர்கள் மத்தியில் உட்கார்ந்திருந்த தனது காதலியிடம் சென்று தனது காதலை புரபோஸ் செய்தார்.

இதனை அடுத்து திடீரென தீபக் சஹர் புரபோஸ் செய்ததும் காதலி சற்று திகைத்தாலும் அவரது காதலை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து தீபக் சஹர் காதலிக்கு மோதிரம் மாற்றினார்.

இதையடுத்து இன்று தீபக் சஹாரின் நிச்சயதார்த்தம் நடந்ததாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version