தமிழ்நாடு
டிசம்பர் 4ல் 3 மாவட்டங்கள், டிசம்பர் 5ல் 9 மாவட்டங்கள்: கனமழை குறித்த எச்சரிக்கை!
![rain today - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/rain-today.jpg)
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் .
இந்த நிலையில் நாளை மறுநாள் டிசம்பர் 4ஆம் தேதி மூன்று மாவட்டங்களிலும் அதற்கு அடுத்த நாள் டிசம்பர் 5ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 4ஆம் தேதி மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 4ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 5ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி அந்த புயல் ஆந்திரா, ஒடிசா மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.