இந்தியா

அக்கிரமங்களை கண்டித்து மோடிக்கு கடிதம் எழுதிய நடிகருக்கு பாஜகவினர் கொலை மிரட்டல்!

Published

on

ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடவில்லை என்றால் மிரட்டி, அடித்து, வெட்டி கொலை செய்யும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட அறிவார்ந்த பிரபலங்கள் ஒரு கடிதம் எழுதியிருந்தனர். இதில் மேற்குவங்கத்தை சேர்ந்த நடிகர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர், இதர சிறுபான்மையினர் மீது கும்பல் தாக்குதல் நடத்தி கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறையை தூண்டும் கோஷமாக மாறிவருவதையும் தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தி திரைத்துறையினர் மற்றும் அறிவார்ந்த பிரபலங்கள் கடிதம் எழுதினர்.

அந்த கடிதத்தில் இயக்குநர் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் அபர்ணா சென், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா, மேற்கு வங்க நடிகர் கவுசிக் சென் உள்ளிட்ட 49 பேர் கையெழுத்திட்டிருந்தனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகர் கவுசிக் சென்னுக்கு பாஜகவினர் கொலை மிரட்டலை விடுத்துள்ளனர். இது மேற்கு வங்கத்தில் அதிர்வலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version