தமிழ்நாடு
பள்ளி மாணவி பலாத்கார கொலை: இளைஞருக்கு தூக்குத் தண்டனை!
திருப்போரூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞருக்கு தூக்குத்தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போது ஆலத்தூரை சேர்ந்த அசோக் என்ற இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் அந்த மாணவியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து அசோக் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், சோக்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.21000 அபராதம். சிறுமியைக் கொலை செய்ததற்கு அசோக்குமாரை சாகும் வரை தூக்கிலிடுமாறு உத்தரவிட்டார் நீதிபதி.