தமிழ்நாடு

கலைஞானி கமல் சாருக்கு இந்த படங்கள் சமர்ப்பணம்.. கலாய்த்த உதயநிதி!

Published

on

சென்னை: கிராமசபை கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் கருத்திற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது பதில் அளித்துள்ளார்.

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ”கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபை அமைப்பு இருப்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வளவு ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் என்னை போல சிறுவனை பாா்த்து கிராமசபைக் கூட்டங்களை நடத்துகிறீா்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று மறைமுகமாக திமுக தலைவா் ஸ்டாலினை விமர்சித்து இருந்தார்.

இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்த கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ”நான் அரசியலை பற்றி பேசுகிறேன்” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி கமல்ஹாசனை கிண்டல் செய்தார். இதனால் மக்கள் நீதி மய்யம் – திமுக இடையே தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டில் ”கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்” என்று கூறி இருக்கிறார்.

Trending

Exit mobile version