இந்தியா

விவசாயிகள் போராட்டம் முடிந்து வீடு திரும்பிய தந்தையை வரவேற்கும் மகள் – வைரல் வீடியோ

Published

on

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெயில், மழை, பணி பாராமல் அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இதில், சிலர் இறந்தும் போயினர். ஆனால், பாஜக அரசு மனம் இறங்கவில்லை.

தற்போது, விரைவில் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் வருவதால் இது பாஜகவின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதை புரிந்துகொண்ட பிரதமர் மோடி இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

எனவே, விவசாயிகளும் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இது பாஜகவுக்கு தோல்வியாக முடிந்தது. தற்போது, போராட்டத்தை வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் வீடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், வெற்றிக்களிப்போடு வீடு திரும்பிய பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயியை அவரின் இரு மகள் நெகிழ்ச்சியுடன் வரவேற்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version