தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த மே 6வரை அவகாசம் நீட்டிப்பு; தமிழக மின்பகிர்மான கழகம் அறிவிப்பு

Published

on

ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்தவும் மே 6ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

மார்ச் 22 முதல் ஏப்ரல் 30 வரை முந்தைய மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 14வரை மின் கட்டணம் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது பிரதமர் மோடி ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து அறிவித்து உள்ளார். ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து நாளை அறிவிக்க உள்ளார் பிரதமர் மோடி

seithichurul

Trending

Exit mobile version