தமிழ்நாடு
அறையில் இருந்து கொண்டே அனைத்து திட்டங்கள்: முதல்வர் அறையில் மின்னணு தகவல் பலகை!
![cm office dashboard - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/cm-office-dashboard.jpg)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது அறையில் இருந்து கொண்டு அனைத்து திட்டங்களின் நிலைமையை தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு தகவல் பலகை சற்றுமுன் தொடங்கப்பட்டுள்ளது.
உலகமே தற்போது டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் தமிழக அரசும் படிப்படியாக டிஜிட்டல் மயமாகி வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறையில் மின்னணு தகவல் பலகை தொடங்க உள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறையில் டேஷ்போர்டு என்று அழைக்கக்கூடிய மின்னணு தகவல் பலகை தொடங்கப்பட்டது. இதன் மூலம் முதலமைச்சர் தனது அறையில் இருந்தபடியே தமிழக அரசின் அனைத்து திட்டங்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வரின் அறையில் மின்னணு தகவல் பலகை தொடங்கப்பட்டதை அடுத்து அவர் கூறியபோது இது வேகமான ஆட்சி மட்டுமல்ல, விவேகமான ஆட்சி என்றும், துரிதமான ஆட்சி மட்டுமல்ல, துல்லியமான ஆட்சி என்றும் தெரிவித்துள்ளார்.