சினிமா

சாரி நான் ரொம்ப பிஸி!.. அண்ணன் செல்வராகவனை டீலில் விட்ட தனுஷ்….

Published

on

கர்ணன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் அறிவிக்கப்பட்ட  திரைப்படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தயாரிப்பு தரப்பும் கிட்டத்தட்ட உறுதி செய்தது.

அதன்பின், தலைப்பு மட்டுமின்றி கதையும் மாற்ற இருப்பதாகவும் முதலில் செல்வராகவன் கூறிய கதை தனுஷ்க்கு திருப்தி இல்லாததால் வேறு கதையை அவர் தயார் செய்ததாகவும் கூறப்பட்டது. கதை மாறிய நிலையில் இந்த படத்தின் புதிய டைட்டிலாக ’ராயன்’ என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன ராயபுரத்தில் நடைபெறும் கதை என்பதால் ’ராயன்’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது தனுஷ் கேரக்டரின் பெயர் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படம் மூன்று சகோதரர்கள் குறித்த கதை என்றும் இதில் தனுசுக்கு சகோதரர்களாக விஷ்ணு விஷால் மற்றும் ஆர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இருவரிடமும் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்று தெரிகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நாளை இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. தனுஷ் தற்போது மாறன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து திருச்சிற்றம்பலம் மற்றும் நேரடி தெலுங்கு திரைப்பம் என அடுத்தபடங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே, அவரால் தனது அண்ணன் செல்வராகவன் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை எனக்கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version