Connect with us

இந்தியா

இஸ்ரேலில் காணாமல் போன கேரள நபர்.. கண்டுபிடித்து நாடு கடத்த கேரள அரசு கோரிக்கை..!

Published

on

கேரளாவிலிருந்து விவசாயம் குறித்த தொழில் நுட்பத்தை படிப்பதற்காக இஸ்ரேல் சென்ற ஒருவர் திடீர் என காணாமல் போனதை எடுத்து அவரை கண்டுபிடித்து நாடு கடத்துங்கள் என கேரளா அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கேரளாவை சேர்ந்த விவசாயி பிஜூ என்பவர் தனது குழுவினர் உடன் விவசாயத்தின் ஹைட்ரோபோனிக் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்வதற்காக இஸ்ரேலுக்கு சென்றார். அங்கு அனைத்து பணிகளும் முடிந்த பிறகு இந்தியாவுக்கு திரும்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அவர் காணாமல் போனதாகவும் அவரது கையில் ஐம்பதாயிரம் இஸ்ரேலிய கரன்சி இருந்ததாகவும் உடன் வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருந்துகள் வாங்க வேண்டும் என்று கூறி அவர் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் பல மணி நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை என்றும் அந்த குழுவில் இருந்த மற்றொரு விவசாயி குறித்துள்ளார். மேலும் இன்னொரு விவசாயி இதுகுறித்து கூறியபோது, இஸ்ரேலில் துப்புரவு தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள் என்றும் பண்ணை தொழிலாளர்கள் இன்னும் அதிகமாக சம்பளம் பெறுவதாகவும் அந்த வேலையில் சேர தனக்கு ஆர்வமாக இருந்ததாக கூறியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து ஏதாவது ஒரு பண்ணையில் அவருக்கு வேலை கிடைத்திருக்கலாம் என்றும் அவர் தலைமறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காணாமல் போன பிஜூவை தேடும் பணியில் உள்ளூர் காவல்துறை, இந்திய தூதரக அதிகாரிகள் ஆகியோர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினர் அவர் மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து கூறியபோது அவரை தேடும் பணியை நிறுத்துமாறு அவர் பாதுகாப்பாக இருப்பதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாகவும் கூறி உள்ளனர்.

இந்த நிலையில் பிஜூவை கண்டுபிடித்து அவரை நாடு கடத்த கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிஜூவின் விசாவை ரத்து செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து இஸ்ரேல் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறிய போது நாங்கள் பிஜூ மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றும் அவரை கைது செய்தவுடன் அவரை நாடு கடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!