சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு சற்றுமுன்னர் திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தாலும், இந்திய திரையுலகில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிக்கு இந்த விருது வழங்குவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து சாதனை செய்துள்ளார் என்பதும் இன்று வரை அவர் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த விருதை ஏற்கனவே சிவாஜிகணேசன், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, ராஜ்குமார், திலீப்குமார், தேவ் ஆனந்த் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version