சினிமா செய்திகள்

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு ஈபிஎஸ், கமல் வாழ்த்து!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது என்ற செய்தியைப் பார்த்தோம். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சற்று முன்னர் தனது டுவிட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இந்திய திரையூலகில் பல்வேறு சாதனைகள் செய்த ரஜினிகாந்துக்கு இந்த விருதை அளிப்பதில் பெறப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்

இந்நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.

 

 

 

Trending

Exit mobile version