சினிமா செய்திகள்

பாலிவுட்டில் பிசியாக இருக்கும் டாப்ஸி ஜெயம் ரவிக்கு ஓகே சொல்வாரா?

Published

on

ஜெயம் ரவியின் 24வது படமான கோமாளி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜெயம் ரவியின் 25வது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

வாமனன், என்றென்றும் புன்னகை படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் தனது 25வது படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். அப்போ பொன்னியின் செல்வன் என்ன ஆச்சுன்னு கேக்காதீங்க.. இன்னும் அதிகாரபூர்வ தகவல் வரவில்லை.

அகமது இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு 2 ஜோடிகள். அதில், ஒரு நாயகியாக டாப்ஸி நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்ஸி, பாலிவுட்டில் தற்போது முன்னணி நாயகியாக வளர்ந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் ஜெயம் ரவியுடன் நடிக்க ஓகே சொல்வாரா என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

ஆனால், சமீபத்தில் மும்பை சென்ற இயக்குநர் அகமது சொன்ன கதைக்கு டாப்ஸி பச்சைக் கொடி காட்டியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Trending

Exit mobile version