தமிழ்நாடு
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? 11 எண் வரையிலான கூண்டுகளுக்குமான விளக்கம் என்ன?
புயல் வரும் போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணித்துத் தெரிவிக்கும் முறையே புயல் எச்சரிக்கை கூண்டு. இவை கடலில் உள்ள கப்பல்களுக்கு வானிலை குறித்த தகவல்களைத் தெரிவிக்க முக்கியமாகப் பயன்படுத்துகிறது. இதை வைத்து எந்த அளவிற்குப் புயலின் தாக்கம் இருக்கும் என்பதை மக்களும் அறிந்துள்ள முடியும்.
சில நாடுகளில் புயல் எச்சரிக்கைக்காகக் கொடி ஏற்றப்படும். அப்படி இந்தியாவில் சிலிண்டர் மற்றும் கோன்கள் பயன்படுத்துகின்றன. எனவேதான் புயல் எச்சரிக்கை கூண்டு என்று கூறப்படுகிறது. இதுவே இரவு நேரம் என்றால் சிவப்பு மற்றும் வெள்ளை மின் விளக்குகள் பயன்படுத்தி புயல் எச்சரிக்கை விவரங்கள் தெரிவிக்கப்படும்.
பொதுவாக இந்த புயல் எச்சரிக்கை கூண்டுகள் 1 முதல் 11 வரை ஏற்றப்படுகிறது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பெரிய பாதிப்புகள் இருக்காது. பலமான காற்று வீசும். 60 கிலோ மீட்டர் காற்றின் வேகம்.
இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகங்களில் உள்ள வீட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும். பலமாக காற்று வீசும் போது கப்பல்கள் அருகருகில் இருந்தால் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இது ஒரு கப்பல்களுக்கான எச்சரிக்கையாக உள்ளது. 60 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகம்.
மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், பலத்த காற்றோடு திடீர் மழை பெய்யும். இந்த வானிலையால் துறைமுகத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டும். கப்பல்களும் பாதிப்பிற்குள்ளாகும். 40 முதல் 50 கிலோ மீட்டர் காற்றின் வேகம்.
நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
துறைமுகத்தில் மற்றும் கடலோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதைக் குறிக்கிறது. 50 முதல் 60 கிலோ மீட்டர் வரையிலான காற்றின் வேகம்.
ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, புயல் உருவாகி இருப்பதைக் குறிக்கிறது. மேலும் புயல் இடது பக்கமாக கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை குறியாகவும் இது உள்ளது.
ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஐந்து போன்றுதான். ஆனால் இது புயல் வலது புறமாகக் கடக்கும் என்பதைக் குறிக்கும்.
ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகம் வழியாக அல்லது அருகில் புயல் கரையைக் கடக்கும் என்பதை குறிப்பதாகும். இதனால் துறைமுகத்திற்குப் பெரிய பாதிப்பு ஏற்படும்.
எட்டம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
எட்டம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு மிகவும் அபாயம் என்பதைக் குறிக்கும். காற்றின் வேகம் 90 முதல் 120 கிலோ மீட்டர் வரையில் இருக்கும். புயல் துறைமுகத்தின் இடது பக்கம் கடக்கும்.
ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
தீவிர புயல் அல்லது அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது என்ற பொருள். மேலும் புயல் வலது புறமாகக் கடக்கும் வாய்ப்புகள் உண்டு.
பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு:
காற்றின் வேகம் 120 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். மிகவும் அபாயகரமான எச்சரிக்கை இது. புயல் கடக்கும் போது துறைமுகத்தைப் பலமாகச் சேதப்படுத்தும் அளவுக்கு மோசமாக இருக்கும்.
பதினொன்றாம் எண் புயல் எச்சரிக்கை:
வானிலை மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்படும். மிகவும் உச்சபட்சமான புயல் எச்சரிக்கையைக் குறிக்கும்.