தமிழ்நாடு

Cyclone Warning: தென் தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை- மிக கனமழை பெய்யும் எனவும் தகவல்!

Published

on

அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாகவும், இதனால் அடுத்த சில நாட்களில் தென் தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தப் புதிய புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவல்படி:-

தென் மேற்கு அரபிக் கடலில் புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. இதன் மூலம் வரும் 14 ஆம் தேதி, தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இந்த தாழ்வுப் பகுதி, வடக்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக வரும் 16 ஆம் தேதி உருவெடுக்கும்.

இதன் மூலம் லட்சதீபம், கேரளா மற்றும் தென் தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி முதல் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே மீனவர்கள் 14 ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்பி விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version