தமிழ்நாடு

வலுவடைந்த புரேவி புயல்; கரையை கடப்பது எப்போது?

Published

on

தென் கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள புரேவி புயல், மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1040 கிலோ மீட்டர் தென் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும்.

டிசம்பர் 2-ம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் புயல் கரையைக் கடக்கும்.

பின்னர் கன்னியாகுமரி கடல் பகுதிக்கு நகரும் புயலால், டிசம்பர் 3-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென் காசி, இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வாரம் வங்கக் கடலில் உருவான நிவர் புயல், சென்னை – புதுவை இடையில் மரக்காணம் பகுதியில் கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version