தமிழ்நாடு

பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்: புறக்கணித்த அமைச்சர் சி.வி.சண்முகம்!

Published

on

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை முக்கியமான அமைச்சரான சி.வி.சண்முகம் புறக்கணித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என குரல் கொடுத்தார் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா. இதற்கு ஆதரவும் எழும்ப அதிமுகவில் கலகம் தொடங்கியது. இந்த சூழலில் இந்த நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது அதிமுக தலைமைகள். இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி மற்றும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டுமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர் சி.வி.சண்முகம் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் விழுப்புரத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு தலைமையுடன் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

Trending

Exit mobile version