Connect with us

தமிழ்நாடு

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Published

on

தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் (ஏப்ரல் 1) சுங்கக் கட்டணம் 10% வரை உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை எவ்வகையிலும் மேம்படுத்தாமல், ஆண்டுக்கு ஆண்டு சுங்கக் கட்டணத்தை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் சுங்கக் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சுங்கக் கட்டணம் உயர்வு

இந்தியாவின் உள்ள சுங்கச் சாவடிகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், 10 சதவிகிதத்திற்கும் மேல் தமிழ்நாட்டில் தான் உள்ளது. தமிழ்நாட்டில் 6606 கி.மீ அளவில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 5134 கி.மீ சாலைகளுக்கு, அதாவது 77% சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தேசிய சராசரியான 20% விடவும் 4 மடங்கு அதிகமாகும்.

இன்று அதிகரிக்கப்பட்ட கட்டண உயர்வுடன் சேர்த்தால், மகிழுந்தில் பயணிக்க ஒரு கி.மீ.-க்கு ரூ.1.52 சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகமாகும். சுங்கக் கட்டண உயர்வின் காரணத்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து அனைத்துத் தரப்பு பொதுமக்களும் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

60 கிமீக்கு ஒரே சுங்கச்சாவடி, தமிழ்நாட்டில் 9 சுங்கச் சாவடிகளில் 31.03.2023 ஆம் தேதியுடன் சுங்கக் கட்டணம் 40% குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த நிலையில், இவை எதுவும் இன்னமும் செயலுக்கு வரவில்லை; ஆனால், கட்டணம் மட்டும் உயருகிறது. இது எந்த விதத்தில் நியாயம்?

சுங்கச் சாவடி தொடர்பான சீர்த்திருத்தங்களைச் செய்யாமல், சாலைகளை மேம்படுத்தாமல் கட்டணங்களை மட்டும் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு முழுவதிலும் இன்று முதல் (ஏப்ரல் 1) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வினை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!