தமிழ்நாடு

சுங்கச்சாவடி கட்டணங்கள் நியாயமாக இல்லை: சென்னை ஐகோர்ட் கருத்து

Published

on

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமான தொகையாக இல்லை என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் வாகன உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்

மேலும் ஃபாஸ்டாக் முறை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இன்னும் பலருக்கு ஃபாஸ்டாக் முறை எளிதில் அணுகும் வகையில் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்

மேலும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டாக் முறை இருக்க வேண்டும் என்றும் ஃபாஸ்டாக் முறை குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்

மேலும் சுங்க கட்டணங்களை பரிசீலிக்கும்படி நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர்நீதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version