தமிழ்நாடு
தமிழகத்தில் எந்த பணிகளுக்கு எல்லாம் ஊரடங்கில் இருந்து தளர்வு.. அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் உட்பட சில பணிகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வு குறித்த அரசாணையில், கொரோனா பாதிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில் மட்டும் இந்த தளர்வுகள் கிடையாது.
நீர் பாசனம், அணை பாதுகாப்பு, சாலை மேம்பாலப் பணிகள், மருத்து கல்லூரிகள், மருத்துவ பணிகள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.
அத்தியாவசிய பணிகளுக்கான செயல்படும் மத்திய மற்றும் மாநில அலுவலகங்களில் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.