கிரிக்கெட்

தக்க வைத்து கொள்ளும் 3 வீரர்களில் தோனி இல்லையா? சிஎஸ்கேவின் அதிரடி முடிவு

Published

on

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைய உள்ளதை அடுத்து ஒட்டுமொத்தமாக வீரர்களின் ஏலம் நடைபெறும் என்றும் ஒவ்வொரு அணியும் இரண்டு அல்லது மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற விதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மூன்று வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டால் தோனி, ருத்ராஜ், ஜடேஜா, ஆகிய மூவரை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தோனி தரப்பிலிருந்து வெளிவந்த செய்தியின் படி 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் சிஎஸ்கே வின் எதிர்காலம் கருதி டூபிளஸ்சிஸ், ருத்ராஜ் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தான் அணியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி நிர்வாகத்தைப் பொருத்தவரை ஒரே ஒருவரைதான் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றால் கூட தோனிக்கு தான் நாங்கள் முதல் வாய்ப்பு கொடுப்போம் என்றும் ஆனால் அதே நேரத்தில் தோனி என்ன முடிவெடுக்கிறாரோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றும் தோனி விரும்பினால் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து தொடரலாம் என்றும் அவர் விலக விரும்பினால் தாராளமாக விலகிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுவதாக தெரிகிறது.

எனவே அடுத்த ஆண்டு தல தோனி சிஎஸ்கேவுக்கு விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version