கிரிக்கெட்
ரூ.1.50 கோடி கொடுத்து வாங்கிய சிஎஸ்கே வீரருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய சிஎஸ்கே வீரர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சிக்கலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் மிக அபாரமாக விளையாடிய வீரர்களில் ஒருவர் ராஜ்வர்தன். இவரை சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி ஒன்றரை கோடிக்கு ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜ்வர்தன் தனது வயதை மறைத்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பிஎஸ் பிசிசிஐக்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ராஜ்வர்தன் உண்மையான வயது இருபத்தி ஒன்று என்றும் அவர் தனது வயதை மறைத்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் விளையாடி உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எட்டாம் வகுப்பு படித்தபோது அவரது பிறந்த தேதி மாற்றப்பட்டதாகவும் அவர் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐ விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்ரவுண்டரான ராஜ்வர்தன் சிஎஸ்கே அணியில் இருப்பது பலம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.