கிரிக்கெட்

கே.எல்.ராகுல், கெய்ல் காலி… ஜடேஜாவி்ன் அற்புத ஃபீல்டிங்கால் வெற்றியை நோக்கி CSK!!!

Published

on

ஐபிஎல் 14வது சீசனின் 8வது போட்டி இன்று நடக்கிறது. இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டிக்கான டாஸ் வென்ற சென்னை அணி, பவுலிங் செய்ய தீர்மானித்தது. 

இதைத் தொடர்ந்து பஞ்சாப் சார்பில் ராகுல் மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். மயான்க், டக் அவுட்டாகி வெளியேற, ராகுலை ரவீந்திர ஜடேஜா அற்புதமான த்ரோ மூலம் ரன் அவுட் ஆக்கினார். 

அதைத் தொடர்ந்து அதிரடி காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கெய்லும், 10 ரன்களில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து களம் கண்ட நிக்கோலஸ் பூரனும் டக் அவுட் ஆனார். தீபக் சஹார் முதல் மூன்று ஓவர் ஸ்பெல் மூலம் 3 விக்கெட்டுகள் எடுத்தார். தற்போது சென்னை அணியின் கை ஓங்கியிருப்பதால், அந்த அணி ஜெயிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. சென்னை அணி, முதல் போட்டியில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Trending

Exit mobile version