கிரிக்கெட்

45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!

Published

on

இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்கள் குவித்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் 221 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் கொல்கத்தா அணி சிஎஸ்கேவின் அபார பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. தீபக் சஹர் முக்கிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கில், ரானா, மோர்கன், சுனில் நரைன் ஆகிய 4 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பதும் இவர்கள் இருவரும் அவுட் ஆகிவிட்டால் கொல்கத்தா அணியின் மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றால் முதல் இடத்தைப் பெறுவது மட்டுமன்றி நல்ல ரன்ரேட்டையும் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version