கிரிக்கெட்
20வது ஓவரில் 37 ரன்கள்: பெங்களூருக்கு 192 ரன்கள் இலக்கு!
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணியின் சூப்பர் ஹீரோ ஜடேஜா கடைசி ஓவரில் 37 ரன்கள் அடித்த காரணத்தினால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 191 ஆக உயர்ந்துள்ளது.
19 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதனை அடுத்து 20-வது ஓவரை ஹர்ஷத் பட்டேல் வீசிய நிலையில் அந்த ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி, ஒரு இரண்டு ரன்கள் என 36 ரன்கள் அடித்தார். மேலும் ஒரு நோபாலும் வீசப்பட்டதால் அந்த ஓவரில் மட்டும் 37 ரன்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக டுபிளஸ்சிஸ் 50 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 192 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பெங்களூர் அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.