கிரிக்கெட்

நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் நேரடியாக 2வது இடம்: சி.எஸ்.கே சாதிக்குமா?

Published

on

இன்று பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது.

பஞ்சாப் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கான் மட்டும் 47 ரன்கள் எடுத்து அணியின் மானத்தைக் காப்பாற்றினார்.

இந்தநிலையில் 107 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகின்றது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஏற்கனவே ஒரு போட்டியில் விளையாடி தோல்வியடைந்துள்ளதால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எனவே இன்று 107 என்ற இலக்கை 10 ஓவர்களுக்குள் முடிந்து விட்டால் அந்த அணி நேரடியாக புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை சிஎஸ்கே செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version