கிரிக்கெட்

முதலிடத்தை பிடித்த சென்னை அணி செய்த சாதனை இதுதான்!

Published

on

ஐபிஎல் அணிகளில் ஒன்றாகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது இரண்டாவது போட்டியை விளையாடவுள்ள நிலையில் சத்தமில்லாமல் ஒரு புதிய சாதனை செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட ஐபிஎல் அணிகள் அனைத்துக்கும் சமூக வலைதளப் பக்கங்கள் உள்ளன என்பது தெரிந்தது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அனைத்து அணிகளும் ஏகப்பட்ட ஃபாலோயர்களை வைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 7 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்ததை அடுத்து ஐபிஎல் அணிகளில் அதிக ஃபாலோயர்களை கொண்ட அணி என்ற முதல் இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சென்னையை அடுத்த 6.9 மில்லியன் ஃபாலோயர்களுடன் மும்பை அணி இரண்டாம் இடத்தயும், 6.1 மில்லியன் ஃபாலோயர்களுடன் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி. ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளது என்பது 1.6 லட்சம் ஃபாலோயர்களை ராஜஸ்தான் அணி வைத்து கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டெல்லி அணியுடன் மோதி தோல்வி அடைந்த சென்னை அணி இன்று பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்று பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version