கிரிக்கெட்
சென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
சென்னை சூப்பர் கின்ஸ் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளது.
ஐபிஎல் 2020 போட்டிகள் துபாயில் நடைபெற உள்ள நிலையில்; அனைத்து அணி வீரர்களும், அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அணியில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கோவிட்-19 தொற்று அடுத்தடுத்து உறுதியானது, ரசிகர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர் தீபக் சஹார் கோவிட்-19 தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார் என்று அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆனாலும் இன்னும் ஒரு முறை கோவிட்-19 பரிசோதனை செய்து, அப்போதும் தொற்று இல்லை என்று உறுதியான பிறகே தீபக் சஹார் பயிற்சிக்கு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ருத்ராஜ் ருத்ராஜ் கெய்க்வாட் கோவிட்-19 தொற்று நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.