கிரிக்கெட்

சென்னை வந்திறங்கிய தோனி மற்றும் குடும்பத்தார்- விமான நிலையத்தில் குவிந்த கூட்டம்!

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டித் தொடர் நெருங்கி வருவதை அடுத்து குடும்பத்துடன் சென்னை வந்து இறங்கியுள்ளார்.

வருகிற செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கிளம்பும் முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்காக முதல் ஆளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்து இறங்கி உள்ளார்.

தோனி, தனது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவா உடன் நள்ளிரவு போல சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் நடு இரவில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிவிட்டது. தோனி மட்டுமல்லாது அடுத்தடுத்து சிஎஸ்கே வீரர்கள் தொடர்ச்சியாக சென்னை வர உள்ளனர்.

அனைவரும் இங்கு சில நடைமுறைகளை நிறைவு செய்து பின்னர் மொத்த அணியினரும் ஒன்றாக சென்னையில் இருந்தே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்ல உள்ளனர். வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி சிஎஸ்கே குழு சென்னையில் இருந்து கிளம்புகிறது.

seithichurul

Trending

Exit mobile version